கோவை : 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! வாலிபர் போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தந்தையுடன் வசித்து வருபவர் 13 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் மணிகண்டன்(28). இந்நிலையில் சிறுமியின் தந்தை வேலைக்கு சென்று விடுவதால், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் மணிகண்டன் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் மணிகண்டன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை விளையாடலாம் என்று கூறி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் மணிகண்டன் சிறுமியை வீட்டில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமையை மிரட்டியுள்ளார்.

இருப்பினும், சிறுமி தந்தை வீட்டிற்கு வந்தவுடன் நடந்த சம்பவம் குறித்து தந்தையிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சடைந்த சிறுமியின் தந்தை உடனடியாக சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for sexually harassing a 13 year old girl in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->