ஆபாச வீடியோ காண்பித்து 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு.! வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் ஆபாச வீடியோ காண்பித்து ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வருபவரின் வீட்டிற்கு, ஊட்டி பகுதியை சேர்ந்த முரளிதரன்(21) என்பவர் விருந்துக்காக வந்துள்ளார்.

அப்பொழுது மூன்று நாட்கள் வரை தங்கி இருந்த முரளிதரன், சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பார்க்க அடிக்கடி சென்று, செல்போனில் ஆபாச வீடியோக்களை கார்த்தி சிவமிக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து, பள்ளிக்கு சென்ற சிறுமி சக தோழிகளிடம் இதுகுறித்து கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பள்ளி ஆசிரியைக்கு மாணவிகள் மூலம் தெரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியை இதுகுறித்து மாணவியரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் முரளிதரணை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for sexually harassing 7th class girl in Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->