மாணவனின் கையில் இரும்பு ராடால் தாக்கிய ஆசிரியர் தலைமறைவு - போலீசார் வலைவீச்சு.!!
teacher attack school student eith iron rod in andira
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் கையை உடைத்ததாக ஒரு ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதாவது ஆசிரியர் இரும்பு மேசையால் மாணவனை கொடூரமாக தாக்கியதில், அவரின் கை உடைந்துள்ளது. இதனால் வலீத் தாங்க முடியாமல் கதறி அழுத்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வருக்கு எஸ்ரே எடுத்து பார்த்த போது மாணவனின் கை மூன்று இடங்களில் உடைந்தது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் அந்த ஆசிரியரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளியில் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
teacher attack school student eith iron rod in andira