11ம் வகுப்பு மாணவி பலாத்காரம் - போக்சோவில் இளைஞர் கைது - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கூலித்தொழிலாளி தனுஷ் (19). இந்நிலையில் தனுசுக்கும், 16 வயதுடைய 11ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தனுஷ் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து மாணவி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் தனுசை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for raping 11th class girl in theni


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->