திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. காவல்துறை தீவிர விசாரணை... - Seithipunal
Seithipunal


திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர் அரசுகுமார். கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர்  இவருக்கு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  பகுதியை சேர்ந்த மகேஸ்வரி  என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

கடந்த வாரம் பாலக்கோடுக்கு இருவரும் வந்துள்ளனர். அதனை தொடர்ந்து அரசுகுமார் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பும்பியுள்ளார், வீட்டிற்கு வந்த அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், பயந்து போன அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது மகேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவார்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபாரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம்  குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young Woman Comitted Suicide In Dharmapuri


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->