அந்தியூரில் பயங்கரம்.! ஆட்டோவில் சென்ற ஆசிரியையின் கழுத்தை அறுத்த வாலிபர்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியையின் கழுத்தை வாலிபர் பிளேடால் அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ராஹிலா (25). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல் பாளையத்தில் உள்ள பள்ளி தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ரஹிலாவும் இவரது உறவினரான கூடலூரை சேர்ந்த ஜிவா(30) என்பவரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ஜீவா ரஹிலாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் ரஹிலா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ஜீவா, தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் ரஹிலாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஜீவாவை ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் ரஹிலாவை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜீவாவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man who cut the teacher neck with a blade in Anthiyur


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->