ராணிப்பேட்டை || திருமணமாகாத விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை || திருமணமாகாத விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அடுத்த புளியந்தாங்கல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத். இவர் நெல்லிக்குப்பம் சிப்காட் பேஸ்- மூன்றில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது குடும்பத்தினர் கடந்த 7 வருடங்களாக பெண் பார்த்து வந்தனர். ஆனால், எதுவும் சரியாக அமையாததால் வினோத் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வினோத் நேற்று திடீரென வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வினோத்தை மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 


அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வினோத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, தகவல் அறிந்த போலீசார் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, வினோத்தின் உடலை கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வினோத்தின் தற்கொலைக்கு காரணம் திருமணமாகாத விரக்தியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man sucide fornot getting married in ranipet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->