பள்ளி மாணவியை கடத்திச் சென்று சீரழித்த வாலிபர்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேவியர் காலனியில் ஜாக்கோப் மெல்கி எத்தேன்(வயது 25) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜாக்கோப்பை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஜாக்கோப்பிற்கு 1000 ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man sexual Harrasment for school girl


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->