22 வயது இளம் பெண்ணுடன் உல்லாசம்.. பிறகு இளைஞருக்கு ஏற்பட்ட சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

அதன் பிறகு இளம் பெண்ணைக் கழட்டிவிட நினைத்த பிரகாஷ், அவருடனான பழக்கத்தை குறைத்துள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் பிரகாஷிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் பிரகாஷை கைது செய்த காவல்துறையினர், விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மூன்று மாதத்திற்குள் இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man sentenced to 10 years


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->