திருநெல்வேலி: வேலை செய்து கொண்டிருந்த போது ஏணியிலிருந்து தவறி விழுந்தவர் பலி.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏணியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வள்ளியூர் அம்மன்கோவில் கிழக்கு தெருவை சேர்ந்த சுடலையாண்டி என்பவரது மகன் முருகன்(29). இவர் நேற்று வள்ளியூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மெட்டல் கடையில் ஏணியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். 

அப்பொழுது முருகன், எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த முருகனை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் முருகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வள்ளியூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man fell from the ladder was killed in Tirunelveli


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->