திருநெல்வேலியில் சோகம் : மூடியிருந்த ரெயில்வே கேட்டில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் சோகம் : மூடியிருந்த ரெயில்வே கேட்டில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு.!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே அமச்சிகோயில் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா மகன் அருண். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் தனது நண்பர் ஆனந்த் என்பவருடன் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சாத்தான்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். 

இருசக்கர வாகனத்தை அருண் என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது அருண் பின் சீட்டில் இருந்த ஆனந்திடம் திரும்பித், திரும்பி பேசிய வண்ணம் வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் தெற்கு வள்ளியூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. 

இதனை கவனிக்காத அருண் பூட்டியிருந்த ரயில்வே கேட்டின் மீது இருசக்கர வாகனத்தை மோதி உள்ளார். இதில் அருண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். ஆனந்த் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man died for bike accident in tirunelveli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->