தாய் வீட்டிற்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தற்கொலை... திருப்பூரில் நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையத்தில் வசித்து வருபவர் குட்டு குமார்.. இவருக்கு கடந்த  3 மாதங்களுக்கு முன் சுமித்ரா(20) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. குட்டுகுமார் பனியன் நிறுவன டெய்லராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கணவனிடம்  தனது தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால், அதற்கு குட்டு குமார் மறுக்கவே அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்படவே  மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால், அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young girl committed Suicide near Thiruppur


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->