25 ஆண்டுகள் போட்டியிட்ட திருநெல்வேலி தொகுதியை விட்ட நயினார் நாகேந்திரன்! நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் பாஜக மாநிலத் தலைவர் மற்றும் தற்போதைய திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏவான நயினார் நாகேந்திரனுக்கு அந்த தொகுதி இந்த முறை ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வந்த நயினார் நாகேந்திரன், இந்த முறை அந்த தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்திருப்பது அவரது விருப்பப்படியே நடந்ததாகவும், அதற்குப் பின்னால் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரனின் அரசியல் பயணம் 2001 ஆம் ஆண்டு தொடங்கியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு முதன்முறையாக அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். அந்த தேர்தலில் அவர் 722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் சசிகலாவுடன் இருந்த நெருக்கம் காரணமாக மின்சாரம், போக்குவரத்து, தொழில்துறை போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார்.

அதன்பிறகு 2006 தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். 2011 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் மீண்டும் தோல்வி கண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்களால் 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2021 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ ஆனார்.

1. திமுகவின் தீவிர அரசியல் திட்டம்

பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனை இந்த முறை தோற்கடிக்க திமுக தரப்பு தீவிரமாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேருவுக்கு சிறப்பு பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என கருதி நயினார் நாகேந்திரன் பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

2. வாக்கு கணக்கு மற்றும் அரசியல் சூழ்நிலை

திருநெல்வேலி தொகுதியில் கணிசமான அளவில் இஸ்லாமியர் வாக்குகள் இருப்பதாகவும், மாநிலத் தலைவர் என்ற நிலையில் அவருக்கு அந்த வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதோடு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3. ஜோதிட நம்பிக்கை

நயினார் நாகேந்திரன் 2006 மற்றும் 2016 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளார். அந்த இரண்டு ஆண்டுகளும் ‘6’ என்ற எண்ணில் முடியும் ஆண்டுகள் என்பதால், 2026 ஆம் ஆண்டும் அதே எண்ணில் முடிவதால் அது தமக்கு ராசியில்லாத ஆண்டாக இருக்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது ஜோதிடரும் “இந்த முறை தொகுதி மாற்றுவது நல்லது” என்று பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த காரணங்களால் நயினார் நாகேந்திரன் இந்த முறை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் தச்சை கணேசராஜா வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இந்த மாற்றம் தென் தமிழக அரசியல் சமநிலையை எப்படி பாதிக்கும் என்பது வரும் நாட்களில் தெளிவாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nayinar Nagendran leaves Tirunelveli constituency after 25 years of contesting Why did he not contest from Nellai constituency


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->