காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞன் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த பொது மக்கள்.! - Seithipunal
Seithipunal


சத்தியமங்கலம் அருகே தன்னை காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கத்தியை கொலை செய்ய முயற்சித்த இளைஞர் .

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது பக்கத்து ஊரான சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த இளம் பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்ததாக கூறப்படுகிறது. 

காதலித்த சில மாதங்களில் சிவக்குமாருடன் பேசுவதை அந்த பெண் தவிர்த்துள்ளார். இதையடுத்து அவ்வப்போது அந்த பெண்ணிடம், தன்னிடம் மீண்டும் பேச சொல்லியும் காதலிக்கவும் கூறி சிவக்குமார் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து தன்னை காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என சிவக்குமார் மிரட்டியுள்ளான்.

இது மட்டுமில்லாமல் அந்த பெண்ணை கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்ததுள்ளர். இதைப்பார்த்து அங்கிருந்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிவக்குமாரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young boy try murder his ex lover


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->