6-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்.! தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை.!
Worker who raped the 6th class girl gets 20 years in prison in Villupuram
விழுப்புரம் மாவட்டத்தில் 6ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமி கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள கொய்யா தோப்புக்கு கொய்யாப்பழம் வாங்க சென்றபோது, அங்கிருந்த தொழிலாளி செந்தில் (35), வாயை பொத்தி சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு செந்திலை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செந்திலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 7 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
English Summary
Worker who raped the 6th class girl gets 20 years in prison in Villupuram