கோவை: மர்மமான முறையில் தொழிலாளி கொலை... காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கோயம்புத்தூர்  எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் பலர் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். இரவில் வேலை செய்துவிட்டு அங்குள்ள கடைகளுக்கு முன் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மார்க்கெட்டில் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் சண்முகம் வேலை முடித்து விட்டு அங்கு படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவர் மீது கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

காலையில் அந்த பகுதியில் சென்றவர்கள் அவர் கொலை செய்யப்படிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கொன்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker Murder Death In Coimbatore Market


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->