தென்காசி: இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் பலி.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தென்காசி மாவட்டம் குருவன்கோட்டை கீழத்தெருவை சேர்ந்த முத்து என்பவரது மகள் அன்னபுஷ்பம்(55). இவர் குருவன் கோட்டை ஆலங்குளம் சாலையில் நடந்த சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வழியாக குருவன்கோட்டை பகுதியை சேர்த்து மாரியப்பன் என்பவர் ஓடி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக திடீரென அன்னபுஷ்பம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அன்னபுஷ்பத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அன்ன புஷ்பம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women killed twowheeler collision in thenkasi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->