ஆணாதிக்க முறை பிரதிபலிப்பா.? பாஸ்போர்ட் பெற பெண்களுக்கு கணவனின் அனுமதி தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Women do not need husbands permission to get passport says Madras High Court
பெண்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவரின் கையெழுத்தோ அல்லது அனுமதியோ பெற தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், சென்னை உயர்நீதிமன்றில் மனு தாள் செய்திருந்தார். குறித்த மனுவில் பாஸ்போர்ட் கோரி மண்டல அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பம் செய்தேன். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து விசாரித்த போது கணவர் கையெழுத்து பெற்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தனர்.

தற்போது கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்த வழக்கு நடப்பதால் கணவர் கையெழுத்தை வலியுறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
குறித்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வுக்கு முன் வநதஹது. அப்போது, பாஸ்போர்ட் பெற கணவர் அனுமதி மற்றும் கையெழுத்தை மனைவி பெற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், கையெழுத்து வாங்க வேண்டும் என வலியுறுத்துவதன் மூலம் பெண்களை கணவனின் உடமையாக கருதும் சமூகத்தின் மனப்பான்மையை அதிகாரி பிரதிபலிக்கிறார் என்றும், கணவருடன் பிரச்னை உள்ள நிலையில் கையெழுத்து பெறுவது இயலாது. திருமணமாகிவிட்டால், பெண் தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடுவது இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கணவனின் அனுமதி, கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்க முறையை காட்டுகிறது என்றும், மனுதாரரின் கோரிக்கையை நான்குவாரத்தில் பரிசீலனை செய்து பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Women do not need husbands permission to get passport says Madras High Court