உபி: மகனுக்கு நிச்சத்த பெண்ணைத் திருமணம் செய்த தந்தை! அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நம்ப முடியாத சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள கிராமத்தை சேர்ந்த ஷாகீல் (55) என்ற நபருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவரது மகனுக்கு (17) கடந்த சில மாதங்களுக்கு முன்னர், 22 வயதுடைய பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், மகனுக்கு வயது குறைவாக இருப்பதும், குடும்பத்தில் பண நெருக்கடி இருப்பதும் காரணமாக திருமணத்தை தள்ளிவைக்கத் தீர்மானித்தனர்.

ஆனால், ஷாகீல் இந்தத் தீர்மானத்தை ஏற்கவில்லை. அதே நேரத்தில் வருங்கால மருமகளுடன் அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசத் தொடங்கினார். இது அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்த, காதலாக மாறியது. மெசேஜ்கள் வழியாக வந்த தகவல்களை அவரது மகன் கவனித்ததும், சந்தேகம் தெளிந்தது.

இந்நிலையில், ‘வேலைக்காக டெல்லி செல்கிறேன்’ என கூறி வீட்டைவிட்டுப் புறப்பட்ட ஷாகீல், அந்தப் பெண்ணை திருமணம் செய்துவிட்டதாக பின்னர் தன் மனைவியிடம் தெரிவித்தார்.

இந்த தகவலைக் கேட்ட மனைவி மனமுடைந்து கதறியுள்ளார். “மகனுக்கு வர வேண்டிய பெண் என் வாழ்வில் வந்துவிட்டாள்” என்ற ஆழ்ந்த வேதனையுடன் அவர் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எந்தவொரு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh DAD marriage son future wife


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->