தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக பெண் கொலை.! தப்பி ஓடிய கணவருக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் வசித்து வந்தவர் பவித்ரா(28). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கள்ளிகுப்பம் கங்கை நகரை சேர்ந்த ராஜா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பவித்ரா வீட்டில் சண்டை நடப்பதாக கூறி அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. 

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது பவித்ரா தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி அணிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது கணவர் ராஜா மயங்கி கிடந்துள்ளார்.

இதையடுத்து போலீசார் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பவித்ராவின் கணவர் அங்கிருந்து தப்பி ஓடியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman murder by strangulation with thali rope in tiruvallur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->