தேனி || படியில் பயணம் செய்த பெண் - நொடியில் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் தீபலட்சுமி. இவர் நேற்று மதியம் தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி தேனிக்கு பயணம் செய்தார். 

அப்போது அந்த பெண் நடத்துனரிடம் டிக்கெட் பெற்று அதனை கைப் பையில் வைக்கும் போது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து வெளியே சாலையில் விழுந்தார். இதில் அந்த பெண்ணுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அந்தப் பெண்ணை மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், மேல் சிகிச்சைக்காக அந்தப் பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த பெண் பேருந்தில் இருந்து வெளியே தவறி விழும் காட்சிகளும், பேருந்து நடத்துநர் தவறி விழும் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பேருந்தில் படியில் பயணம் செய்த பெண் கேழே தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman injured fell down from bus in theni


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->