கழுத்தில் காயங்களுடன் மர்ம முறையில் இறந்து கிடந்த பெண்..! தென்காசியில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரூபன். இவரது மனைவி பிலோமினாள் (38). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மேலும் இவர்கள் சொந்தமாக கோழிப்பண்ணையும், ஆழ்வார் குறிச்சியில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிள்ளைகள் இருவரும் துலுக்கபட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று முன்தின இரவு வழக்கம்போல் பிலோமினாளும், அவரது கணவரும் தூங்க சென்றுள்ளனர்.

இந்நிலையில், காலை பிலோமினாள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பிலோமினாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிலோமினாளின் கழுத்தில் காயங்கள் இருந்துள்ளது. இந்நிலையில் பிலோமினாளின் சகோதரர் தனது அக்காவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிலோமினாள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman found dead mysteriously with neck injuries in thenkasi


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->