சேலம் || செல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற இளம்பெண் மரணம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்தவர்கள் கவுதம்-ராதா தம்பதியினர். இதில், ராதா நேற்று காலை தனது செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் அவருடைய அப்பா, ராதாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் சார்ஜர் ஒயர் சேதமாகி அதன்மூலம் மின்சாரம் ராதாவை மின்சாரம் தாக்கியதா? அல்லது அங்கு இருந்த வேறு ஒயர் மூலம் மின்சாரம் தாக்கி ராதா இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman died for electric shock attack in salem


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->