திருவள்ளூரில் சோகம் - லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் சோகம் - லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி.!

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கபிலன்-அமுதா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கபிலனும், அமுதாவும் இன்று காலை தங்களின் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, கண்டிகை பகுதியில் எதிர் திசையில் வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தம்பதியர் வந்த வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா உடல் நசுங்கி கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

கபிலன் பலத்த காயமடைந்தார். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய கபிலனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தில் உயிரிழந்த அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman died for accident in tiruvallur


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->