மதுவுக்கு அடிமையான கணவன்., தினம் அடி உதை தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்...!! - Seithipunal
Seithipunal


கணவன் மதுவுக்கு அடிமையானதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள நயினாபுரம் காலணி பகுதியில் வசித்து வருபவர் முனிஸ்வரன். இவர் கிருஷ்ணவேணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், முனிஸ்வரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிருஷ்ணவேணி  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள்  அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழிந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide near Virudunagar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->