விபத்தில் இறந்த காதல் கணவன்.. மனைவி எடுத்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துகுடி மாவட்டம், குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள். இவர் பார்வதி என்ற பெண்ணணை 3 ஆண்டுகளுக்கு காதல் திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், பார்வதி துக்கம் தாளாமல் வீட்டிலுள்ள குளியலறையில் தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்ள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed Suicide Near Thoothukudi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->