மகன் பேசாததால்., மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட தாய்..!! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!
Woman Committed suicide
வெளிநாட்டில் உள்ள மகன் பேசவில்லை என தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுகோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் வசித்து வருபவர் யோகாம்பாள். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவரின் பிள்ளைகளில் ஒருவர் சிங்கபூரில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் யோகாம்பாள் தினம் மகனுடன் பேசி வந்திருக்கிறார். ஆனால், அவரின் மகன் அவருடன் பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவதன்று வீட்டில் யாரும் இல்லாத போது கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயற்ச்சி செய்துள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.