திருவண்ணாமலையில் குடும்பத்தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் முள்ளிப்பட்டு கண்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு நவீன் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தின இரவு ரவிக்கும் செல்விக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செல்வியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் செல்வியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர் செல்வி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கணவர் ரவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman commits suicide by setting herself on fire in family dispute


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->