முகநூல் மூலம் 15 வாலிபர்களை திருமணம் செய்த பெண்.! நகை, பணத்துடன் மாயமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ். கூலிதொழிலாளியான இவர் முகநூலில் அதிக நண்பர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். 

அப்போது அருள்ராஜிக்கு வேலூரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பேசி வந்தனர். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, அருள்ராஜ் அந்த பெண்ணை கடந்த ஆண்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். 

அதன் பின்னர் இருவரும் தங்களது வாழ்க்கையை இனிதாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே அருள்ராஜ் கரும்பு வெட்டும் தொழிலுக்கு செல்லும் போதெல்லாம், அவருடைய மனைவி தனது உறவினர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு செல்வார்.

இதைதொடர்ந்து, அருள்ராஜ் தனது தங்கை திருமணத்திற்காக சேர்த்து வைத்த 7 பவுன் நகை, 90 ஆயிரம் ரொக்கபணம் உள்ளிட்டவற்றை தனது மனைவியிடம்  கொடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில், அருள்ராஜ் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்ராஜ் கொடுத்து வைத்திருந்த நகை மற்றும் பணத்துடன் திடீரென காணாமல் போயுள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் மனைவி கொடுத்த முகவரி வைத்து விசாரணை செய்த போது அந்த முகவரி தவறானது என்பது தெரியவந்தது. அதேபோல் அவர் வழங்கிய செல்போன் எண்ணும் வேறு நபருக்கு உரியது என்பது தெரிய வந்தது. 

இதையறிந்த, அருள்ராஜ் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அதில், அருள்ராஜை திருமணம் செய்த பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் பதினைந்து வாலிபர்களை திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman cheating fifteen boys on facebook police investigation


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->