நெல்லையில் பயங்கரம்! பெண்ணை கொடூரமாக தாக்கி 29 சவரன் கொள்ளை...! - அதிரடி வேட்டையில் சிக்கிய 4 பேர் கைது
Woman brutally attacked 29 robbers robbed 4 arrested sting operation
திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில், 18.04.2026 அன்று அதிர்ச்சி ஏற்படுத்திய கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்வி நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில், அடையாளம் தெரியாத நால்வர் கொண்ட கும்பல், தனியாக இருந்த பெண்மணியை மிரட்டலுடன் தாக்கி, வீட்டில் இருந்த தங்க நகைகளை அபகரித்து தப்பிச் சென்றதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டறிய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சேரன்மகாதேவி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில், முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் காவலர்கள் இணைந்து பல்வேறு திசைகளில் விசாரணையை விரிவுபடுத்தினர்.
ஆழ்ந்த விசாரணையின் பலனாக, இந்தக் கொள்ளைச் செயலுக்கு பின்னால் இருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (26), வீரசங்கிலி (20), இசக்கிமுத்து (21) மற்றும் ஒரு இளஞ்சிறார் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சுமார் 29 சவரன் எடையுடைய தங்க நகைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தக் குற்றச்சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட காவலர்களின் திறமையான பணியை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் பாராட்டி பாராட்டுச் செய்தி வழங்கியுள்ளார்.
English Summary
Woman brutally attacked 29 robbers robbed 4 arrested sting operation