கணவனுடன் தகராறு.. குழந்தைகளுடன் பெண் எடுத்த விபரீத முடிவு.. திருவாரூர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


குடும்ப பிரச்சினை காரணமாக தனது குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், கம்பன்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் இவருக்கு திருமணமாகி நந்தினி தேவி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ஜெயசீலன் கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு வரவில்லை.இதனால் அவரை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார் ஆனால் குடும்ப செலவிற்கு கூட பணம் தேவைப்படுவதால் தொடர் வேலை செய்துவிட்டு வருகிறேன் என ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறில் மன உளைச்சல் அடைந்து நந்தினி தேவி வீட்டிலிருந்த எலி மருந்தை தனது குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் தின்றுள்ளார். மேலும் ஒரு நாள் முழுவதும் மருத்துவமனைக்கு செல்லாமல் வாந்தி எடுத்துள்ளார்.

இதற்கிடையில் மனைவி கோபித்துக் கொண்டதற்காக ஜெயசீலன் வீட்டுக்கு வந்துள்ளார். மூவரும் வாந்தி எடுத்து மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவர்களுக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தைகளுக்குடன் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman attempts suicide With their Children


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->