தலைமைச் செயலத்துக்கு எதிரே பெண் செய்த செயலால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


தலைமைச் செயலகத்துக்கு எதிரே பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் சேர்ந்தவர் கௌசல்யா. இவருக்கு சொந்தமான வீட்டை அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பது அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது வீட்டை மீட்டு தரக்கோரி கவுசல்யா காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்துள்ளார்.

 ஆனால், அந்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த கௌசல்யா இன்று தலைமைச் செயலகத்துக்கு எதிரே பெற்றோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட காவலர்கள் உடனடியாக அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர் .

மேலும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்திற்கு எதிரே பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman attempts suicide in front of Secretariat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->