சொத்து தகராறு.. அண்ணியை ஓட ஓட வெட்டிய கொழுந்தனார்.. கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


சொத்து பிரச்சனையால் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் காவேரி. அவரது கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவருக்கும் அவரது கணவரின் சகோதரருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவதன்று சொத்து பிரச்சனை தொடர்பாக இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனால், அங்கிருந்த அரிவாள் மனையால் சுப்ரமணியன் அண்ணி காவேரியை ஓட ஓட வெட்டியுள்ளார், அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த காவேரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் , இந்த சம்பவத்தை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்ட சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman attack by his relatives


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->