நாளுக்கு நாள் அதிகரிக்கும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்...! - எல்லை தாண்டியதாக கூறி 5 பேர் கைது...படகுகள் பறிமுதல்....!
Sri Lankan Navy Atrocities 5 Arrested Charges Crossing Maritime Boundary Boats Confiscated
தமிழகம்-புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களுக்கு கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு பயணமும் இன்று அச்சத்தோடு கலந்ததாக மாறியுள்ளது. கடல் எல்லையை மீறி வந்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும், சில சமயங்களில் தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, குடும்பங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகத் தெரிவித்து இலங்கை கடற்படையினர் திடீரென நடவடிக்கை எடுத்தனர்.
இதன் போது 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினையை தீவிரமாக முன்வைத்துள்ளது.
English Summary
Sri Lankan Navy Atrocities 5 Arrested Charges Crossing Maritime Boundary Boats Confiscated