போர் இல்லாத புதிய உலகத்தை காண வேண்டும்..கி.வீரமணி விருப்பம்!
We need to see a new world without war K Veeramanis wish
ஆதிக்க வெறிக்கும், மதவெறிக்கும் பழிவாங்கும் போக்கிற்கும் மனித உயிர்கள் பலியாவது கேவலமான சமூக கொடுமை. நாகரிக அறிவியல் உலகத்தில் இது ஏற்கக் கூடியதா? என போர் குறித்து கி.வீரமணி கருத்து தெரிவித்தார்.
இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்திவரும் அதிரடி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது, இந்த மோதல் நேற்று 8-வது நாளாக நீடித்தது.
தாக்குதல் சம்பவம் அதிரித்து வரும்நிலையில் இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் பல இடங்கள் கடும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகின்றன.
குறிப்பாக ஈரானின் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் டெஹ்ரான் வரை ஈரானின் வான் பகுதியை தங்கள் போர் விமானங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், எந்தவித தடையும் இன்றி தாக்குதல் தொடுத்து வருவதாகவும் இஸ்ரேல் கூறியது.இதையடுத்து தங்களிடம் சரண் அடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த மிரட்டலை ஈரான் உச்சதலைவர் காமெனி நிராகரித்தார்.இதையடுத்து அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் போர் இல்லாத புதிய உலகத்தை காண அமைதி, ஆக்கம், மனிதம் கொண்ட ஒரு பொது அணி உருவாக வேண்டும் என்று கி.வீரமணி தெரிவித்தார்.இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கத்திற்குப் பயன்பட்டு, மனித குல வளர்ச்சியை மேலும் மேன்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பல நாடுகளில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குலத்தின் அழிவியலை நோக்கிப் பயணிக்கிறது.ஆதிக்க வெறிக்கும், மதவெறிக்கும் பழிவாங்கும் போக்கிற்கும் மனித உயிர்கள் பலியாவது கேவலமான சமூக கொடுமை. நாகரிக அறிவியல் உலகத்தில் இது ஏற்கக் கூடியதா?.
இஸ்ரேலின் இதயமற்ற போர், காசா பகுதியைத் தொடர்ந்து குறி வைத்து திட்டமிட்டு மதவெறி அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை என்ற உலக நாடுகள் சங்கம் அமெரிக்காவின் கைப்பாவையாக இருப்பது வெட்கக்கேடானது. எனவே, போர் இல்லாத புதிய உலகத்தை காண அமைதி, ஆக்கம், மனிதம் கொண்ட ஒரு பொது அணி உருவாக வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
English Summary
We need to see a new world without war K Veeramanis wish