சென்னைக்குள் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு: குடிநீர் விநியோக பகுதிகள், நேரம் குறித்து மாற்றியமைத்துள்ள குடிநீர் வாரியம்..! - Seithipunal
Seithipunal


பெரம்பூரில் பள்ளி சென்ற 10 வயது சிறுமி கனரக லாரி ஏறி தாய் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சென்னைக்குள் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பீக் ஹவரில் தண்ணீர் லாரிகளுக்கு தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, காலை 08 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 04 முதல் இரவு 08 மணி வரை கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்று  சென்னை ஆணையர் அருண் போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த உத்தரவை மீறி சென்னைக்குள் வந்த 200-க்கும் அதிகமான கனரக லாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நேரக் கட்டுப்பாடு காரணமாக சென்னையில் நேற்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 21) குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, சென்னையில் காலை 07.30 மணி முதல் 09 மணி வரை மெட்ரோ குடிநீர் லாரிகள் இயங்க தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், காலை 05 மணி முதல் 07.30 மணிக்குள் தண்ணீர் சப்ளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அத்துடன், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாலைகள் குறித்த பட்டியலை 03 நாள்களுக்குள் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Drinking Water Board has started the work of changing drinking water distribution areas and timings


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->