சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானம்: "மேடே" என அபாய மெசேஜ் அனுப்பிய விமானி: பெங்களூருவில் தரையிறங்கிய விமானம்..! - Seithipunal
Seithipunal


168 பயணிகளுடன் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் எரிப்பொருள் தீர்ந்ததை அடுத்து, விமானி "மேடே" என அறிவித்ததை தொடர்ந்து, குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சில நாட்களில் இவ்வாறு ஏர் இந்தியா விமானங்களில் கோளாறு காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்ற சம்பம் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று கவுஹாத்தியில் இருந்து- சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், எரிப்பொருள் தீர்ந்ததை அடுத்து விமானிகள் 'மேடே' என்று விமான கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்தனர்.

 

இதையடுத்து, குறித்த விமானம் பெங்களூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அபாய அழைப்பு வந்தவுடன், பெங்களூரு விமான நிலையத்தில் விமான ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர். அங்கு மருத்துவ மற்றும் தீயணைப்புப் படை வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். பின்னர், இரவு 08:20 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால் மீண்டும் ஒரு விபத்து தடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pilot sends Mayday distress message from IndiGo flight that took off from Guwahati to Chennai


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->