நாளை மதுரை வருகிறார் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண்!
The Andhra Deputy Chief Minister Pawan Kalyan is coming to Madurai tomorrow
நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நாளை மதுரை விமான நிலையம் வரும் பவன் கல்யாண், திருப்பரங்குன்றம் முருகன், மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து நேராக முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்கிறார்.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் நாளை பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.முக்கியமாக மதுரையில் நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்கிறார்.
அதேபோல ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்ப இருப்பதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் செய்துவருகின்றனர்.
முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமசிவாயம் உள்ளிட்ட பலர் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நாளை மதுரை வருகிறார். தனி விமானம் மூலம் நாளை காலை 11 மணியளவில் மதுரை விமான நிலையம் வரும் பவன் கல்யாண், மாலை 4 மணி அளவில் திருப்பரங்குன்றம் முருகன், மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து நேராக முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்கிறார்.
English Summary
The Andhra Deputy Chief Minister Pawan Kalyan is coming to Madurai tomorrow