சைபர் அடிமைகள் உருவாக்கும் மோசடிகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை: சைபர் குற்றத் துறையின் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சைபர் குற்ற தடுப்புத்துறையின் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணைய வழி வேலை வாய்ப்பு மோசடிகள் மற்றும் அதனால் பாதிக்கப்படும் சைபர் அடிமைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

சமீப காலமாக, டேட்டா என்ட்ரி, கால் சென்டர் வேலைகள் போன்ற சிறிய வேலை வாய்ப்புகள் மூலம் மக்களை இலக்கு வைத்து, சட்டவிரோதமான மனிதவள ஆட்சேர்ப்பு முகமை கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் நோக்கி இந்த வகை ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன.

இம்மாதிரியான மோசடியில், தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்று, அந்த நாட்டு சைபர் மோசடி சங்கங்களின் வழிகாட்டுதலால், பாதிக்கப்பட்டவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதை மிரட்டலின் அடிப்படையில் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களை "சைபர் அடிமைகள்" என அழைக்கப்படுகிறது.

முக்கிய எச்சரிக்கை:

  1. அங்கீகரிக்கப்படாத ஆட்சேர்ப்பு முகமை கள் மூலம் வேலை வாய்ப்புகளை பெற முயற்சிக்க வேண்டாம்.
  2. இணையம் மூலமாக வேலை வாய்ப்பு விளம்பரங்களைத் தேர்வு செய்யும்போது மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள்.

புகார் அளிக்க உதவும் வழிகள்:

  • சைபர் குற்ற உதவி எண்: 1930
  • அரசின் இணையதளம்: www.cybercrime.gov.in

விழிப்புணர்வும் நடவடிக்கையும் முக்கியம்!
சந்தேகத்துக்கிடமான வேலை வாய்ப்புகள் அல்லது ஆட்சேர்ப்பு விளம்பரங்களை சந்தித்தால், உடனடியாக சைபர் குற்றத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது போன்ற மோசடிகளை அடியோடு நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வகை மோசடிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, முடிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Warning to people about scams created by cyber addicts Notification of Cyber ​​Crime Department


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->