புதுக்கோட்டை: காவலர் பயிற்சியின் போது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம்... வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை..!
VOA investigation into the incident in which a boy was shot in the head during guard training
துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவன் மீது குண்டு பாய்ந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாச்சியர் விசாரணை நடத்தினார்.
புதுகோட்டை மாவட்டம், பசுமலைபட்டியில் அமைந்துள்ள பயிற்சி பள்ளியில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பயிற்சியின் போது 2 கிலோ மீட்டருக்கு அப்பால் விளையாடி கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவன் மீது பாய்ந்தது.
இதனை அடுத்து, படுகாயமடைந்த சிறுவன் தஞ்சை மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பயிற்சியில் ஈடுப்பட்ட வீரர்களுடன் வருவாய் கோட்டாச்சியர் விசாரணை நடத்தினார்.
காவலர் பயிற்சியின் போது சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
VOA investigation into the incident in which a boy was shot in the head during guard training