கழிப்பறையில் வைத்து 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய காமக்கொடூரன்.! பொதுமக்கள் செய்த காரியம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி பகுதியில் கல்யாணபுரம் ஏழாவது தெருவைச் சேர்ந்த 23 வயது இளைஞரான மணிமாறன் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை திடீரென்று வாயை பொத்தி அலேக்காக தூக்கிச் சென்றுள்ளார். 

பின்னர், அந்த சிறுமியை அருகில் இருந்த பொது கழிப்பறைக்கு அழைத்துச் சென்று கதவை சாத்தி உள்ளே வைத்து அவரிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். சிறுமி கத்தி கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வர இதை கவனித்த மணிமாறன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

அதன்பின், அப்பகுதியினர் இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிமாறனை தேடி வந்தனர். 

இத்தகைய நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் பதுங்கி இருப்பதை காவல்துறையினர் கண்டறிய போலீசார் மணிமரன் வீட்டை சுற்றிவளைத்து அவரை கைதுசெய்து சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viyasarpadi child raped by 23 years men


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->