விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 10 அறைகள் தரைமட்டமானது. 

இந்த வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெடி விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar crackers factory accident TN CM announces relief fund to Aravind


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->