ச்சா...! அன்பான தாயின் முகமூடி கிழிக்கப்பட்டது...! கள்ளக்காதலுக்காகவே நடத்திய கொடூர சதி...? - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் மற்றும் மம்தா தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது சரண் (4), தனுஸ்ரீ (3) என்ற இரு பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில், அடிக்கடி ஏற்படும் கருத்து முரண்பாடுகள் காரணமாக மம்தா கணவரை பிரிந்து தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அந்த சமயம், அதே பகுதியில் வசித்த வாலிபர் பயாஸ் உடன் மம்தாவிற்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் அவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார்.கடந்த ஜூன் மாதம், மகனை தாய் வீட்டில் விட்டு, மகளை மட்டும் அழைத்துச் சென்ற மம்தா - தனது கள்ளக்காதலனுடன் குழந்தை வாழ்வுக்கு தடையாக இருக்கும் எனக் கருதி, கொடூரமாக தனுஸ்ரீயை படுகொலை செய்தனர்.

அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் குழந்தை உடலை புதைத்து விட்டனர்.இந்நிலையில், மனைவியும் மகளும் காணாமல் போனதாக பாஸ்கர் காவலில் புகார் செய்தார்.

அதன்பேரில் காவலர்கள் தீவிர விசாரணை நடத்த, மம்தா மற்றும் பயாஸ் ஆந்திராவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்களை கைது செய்து வினவியபோது, தங்கள் கொடூர குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

அதன் பின்னர் காவலர்கள் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை அள்ளி எடுத்தனர். தற்போது மம்தா, பயாஸிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

beloved mothers mask was torn off cruel conspiracy carried out for sake adultery


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->