பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவி.. விரட்டியடித்த குடும்பம்.! இளைஞர் மீது பாய்ந்த வழக்கு.! - Seithipunal
Seithipunal


பெண் குழந்தை பிறந்த காரணத்தால் கட்டிய மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிய போடி இளைஞர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கின்ற போடி அருகே இருக்கும் டி.சிந்தலைச்சேரியை சேர்ந்த மெர்சிலின் கிரிஜா என்ற வயது 22 பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்ற 29 கடந்த திருமணம் நடைபெற்றது. 

இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கின்றது. அசோக்குமாருக்கு குழந்தை பிறக்கும் போது ஆண் குழந்தை பிறக்கும் என்று அசோக் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். 

இதன் காரணமாக கணவன்- மனைவிகிடையில் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இருப்பினும், மெர்சிலின் கிரிஜாவை, அவருடைய கணவர் கொடுமைப்படுத்தி குடும்பத்தினர் உறவினர்களுடன் வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். 

இதனை தொடர்ந்து, போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மெர்சிலின் கிரிஜா, புகாரளித்து இருக்கின்றார் இதை தொடர்ந்து போலீசார் மரியசவரி, பீட்டர், வினோத், பாத்திமா மேரி, வில்லியம் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

violence against female baby in podi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->