பள்ளி விடுதியில் பெண் ஊழியர் தற்கொலை: கிடைத்த உருக்கமான கடிதம்! விசாரணையில் பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் திருவள்ளுவன். இவரது மகள் சுபா ஆடலரசி  (வயது 26). இவர் பெரம்பலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராகவும் அதே பள்ளியில் உள்ள பெண்கள் விடுதியில் காப்பாளராகவும் பணியாற்றி வந்தார். 

இவர் பள்ளியில் நடைபெற்ற ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு பிறகு காணவில்லை. இந்நிலையில் பள்ளியில் பணியாற்றும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் விடுதியில் சுத்தம் செய்வதற்காக கதவை திறந்த போது சுபா அங்கிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தார். 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் துப்புரவாளர் உடனடியாக ஆசிரியர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபா உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சுபா தற்கொலை செய்து கொண்ட இடத்தில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. தீராத மன உளைச்சல் காரணமாகவும் உடல்நிலை சரியில்லாத காரணமாகவும் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என சுபா கைப்பட எழுதி கையப்பமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, காதல் விவகாரத்தில் சுபா தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியது. 

சுபா விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை தீவிரமாக காதலித்து வந்தார். விடுமுறை நாளில் சுபா சொந்த ஊருக்கு சென்றபோது அவரது காதலர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்து காதலன் தன்னை ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி அலுவலக உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram woman employee suicide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->