கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நபரை கையும் களவுமாக பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


வில்லியனூர் அருகே உள்ள சுல்லதான்பேட்டை பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரிக்கு அருகே ஒரு கும்பல் கஞ்சா விற்பதாக வில்லியனூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

காவல்துறையினர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவரது சட்டை பையில்  சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அந்த வாலிபர் சட்டை பையில் மொத்தம் 20 பாக்கெட் இருந்துள்ளது.

இதன் பின்னர் காவல்துறையினர் அந்த வாலிபரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும், காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வில்லியனூர் ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்பது தெரியவந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

villiyanoor ganja case arrest


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->