குடிகார்களையும், பெண்களை கேலி செய்பவர்களையும் கதறவிட்ட சிறுதலைக்காட்டு கிராம மக்கள்: தூணில் கட்டி வைப்பதோடு, மொட்டையும் அடிக்கப்படும்: பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ள பேனர்..! - Seithipunal
Seithipunal


வேதாரண்யம் அருகே சிறுதலைக்காடு கிராமத்தில் மது குடித்துவிட்டு வம்பு இழுப்பவர்கள் , பெண்களை காதல் என்று சொல்லி பின் தொடர்பவர்கள், கேலி செய்பவர்களுக்கு ஊர் மக்களின் தண்டனை குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் சிறுதலைக்காடு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மதுவுக்கு அடிமையான வாலிபர்களை நல்வழிப்படுத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்து, சிறுதலைக்காட்டில் கிராம தலைவர் நமகோடி தலைமையில் ஊரை கூட்டி பஞ்சாயத்து செய்துள்ளனர்.

அப்போது, மது குடித்துவிட்டு வரும் நபரை நாள் முழுவதும் கோயில் தூணில் கட்டி வைப்பது என்றும், பெண்களை கேலி செய்தால் அவர்களே மொட்டையடித்துகொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். 

அதில் சிறுதலைகாடு கிராமத்தில் தொடர்ச்சியாக மது அருந்தி விட்டு பிரச்னைகளில் ஈடுபடும் நபர்களை பிடித்து மாரியம்மன் கோயில் தூணில் ஒருநாள் முழுவதும் கட்டி வைக்கப்படும். மேலும் மது குடித்து விட்டு ஓட்டி வரும் பைக்குகள் பறிமுதல் செய்யப்படும். பெண்களை பார்த்து கிண்டல் செய்தாலோ, காதல் என்று கூறி பின் தொடர்வதோ, மனதில் நெருக்கடி கொடுப்பதோ கூடாது.

இதுபோல் யாராவது செய்வது தெரியவந்தால் கோயிலுக்கு முன்பாக குற்றம் செய்தவரே மொட்டை அடித்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், ஊர் மக்கள் ஒன்றாக கூடி நிறைவேற்றிய தீர்மானங்களை அச்சடித்து ஊர் பகுதியில் 02 இடங்களில் பேனர் வைத்துள்ளனர்.தற்போது இந்த பேனர் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த முடிவுக்கு பொதுமக்கள் மற்றும் பெண்கள் தரப்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கிராம தலைவர் நாமகோடி கூறுகையில், வாலிபர்கள் தொடர்ச்சியாக குடித்து விட்டு விபத்தில் சிக்கி இறப்பதும், மது பழக்கத்தால் குடும்பங்கள் சீரழிவதை பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளோம்  என்று கூறியுள்ளார். எங்கள் ஊருக்கு என்று ஒரு கட்டுப்பாடு உண்டு அதனை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Villagers in Siruthalikattu decide to tie you to a pillar if you drink alcohol and shave you if you make fun of women


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->