மறைந்த விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி! - Seithipunal
Seithipunal


தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் நேற்று காலமானார். இவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை விஜயகாந்த் உடல் தீவு திடலுக்கு மாற்றப்பட்டு, காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை, தீவு திடலில் மறைந்த விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தி பிரேமலதாவிற்கு ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி கேப்டன் அவர்கள் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தார். 

உடனடியாக மத்திய அரசின் சார்பாக என்னை அனுப்பி வைத்து விஜயகாந்தின் குடும்பங்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். 
 
விஜயகாந்த் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். கேப்டன் விஜயகாந்தின் மனம் கஷ்டங்களை பார்க்க முடியாத மனம். 

தங்களுடன் இருப்பவர்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என முயன்றவர். வெயில், மழை என பாராமல் கோடான கோடி தொண்டர்கள் அவரது முகத்தை இறுதியாக பார்ப்பதற்கு வந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijayakanth dies Nirmala Sitharaman condolence


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->