என் மகளுக்காக பிரச்சாரம் செய்ய முடியாது - வெளிப்படையாக பேசிய வீரப்பன் மனைவி.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பனின் மகள் வித்யா ராணி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், இவருடைய தாய் முத்து லட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து வருகிறார். 

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி:- “மக்களுக்காவும், தொகுதிக்காகவும் தருமபுரியில் செயல்பட்டு வருகிறேன். மக்களுக்கு செய்ய வேண்டிய கோரிக்கையை தமிழக வாழ்வுரிமை கட்சி மூலம் போராடுவேன்.

என் மகள் முதலில் பாஜகவில் இருந்தார். இப்போது நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார். அது அவருடைய சிந்தனை, கொள்கை. சுயமாக முடிவெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அவர் அந்த கட்சியில் இணைவதற்கு முன்பு என்னிடம் கூறவில்லை. எங்கிருந்தாலும் பத்திரமாக இருக்கும்படி கூறினேன்” என்று தெரிவித்துள்ளார். 

அப்போது செய்தியாளர்களிடம் இருந்து உங்களுடைய மகளுக்காக பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “கட்சி என்பது வேறு, உறவு என்பது வேறு. நான் இப்போது வேறு கட்சியில் இருக்கிறேன். எங்களுடைய கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணியில் இருக்கிறார். அதனை மீறி என்னால் போக முடியாது” என்று ஆணித்தரமாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

veerappan wife muthulakshmi not support to daughter for election


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->