#ஈரோடு || வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த 15 தொழிலாளர்கள் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த 15 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடவள்ளி கிராமத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் வாழைக்காய் வெட்டுவதற்காக, சிக்கரம்பாளையம் கிராமத்திற்கு இன்று காலை வேனில் சென்றனர்.

அப்பொழுது வடவள்ளி முருகன் கோவில் மேடு பகுதியில் வேன் சென்றபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், நிலைதடுமாறி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 

இதுயடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Van accident in erode


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->